ஒற்றுமை

கூற்றுவ னெங்கெங்கும் சீற்றத்தில் சூழ்ந்திருக்க
காற்றெல்லாம் பூமியிலே மாசின்றித் தூய்ந்திருக்க
தூற்றும் குடிகள் இணைதளத்தில் ஆழ்ந்திருக்க
போற்றிய பக்தரெலாம் ஆண்டவனைக் காத்திருக்க
மாற்றத்தை வேண்டுபவன் வீட்டுக்குள் வீழ்ந்திருக்க
நாற்றத்தில் தோய்ந்தவன் வஞ்சத்தை வார்த்தெடுக்க
ஊற்றெடுக்கும் செல்வமெலாம் ஊழலிலே சேர்ந்திருக்க
சேற்றில் உழைப்பவன் தற்கொலையில் மாண்டிருக்க
ஏற்றத்தில் வாழ்பவர ரண்மனையில் கூத்தடிக்க
சோற்றுக் கலைபவன் போக்கற்றே ஓய்ந்திருக்க
ஆற்றுமன தில்லா ரரியணையில் வீற்றிருக்க
வேற்றுமையில் ஒற்றுமை யென்றகூச் சல்வெறும்
கூற்றாய் வளருகின்ற சூது.

எழுதியவர் : கார்த்திகேயன் திருநாவுக் (23-Aug-20, 12:44 pm)
பார்வை : 74

மேலே