அழகி அருகில் வந்தாள்

குளிர்க் காற்று சுகமாய் அடித்தது
உச்சி வெயிலில் அவள் வந்தாள்
இதமான முல்லை நறுமணம் எங்கும்
அருகில் நெருங்கி அவள் நின்றாள்
செம்மஞ்சள் பப்பாளி ரெண்டானது
கன்னங்கள் விரிய முறுவலித்தாள்
காதில் எங்கே காணவில்லை என்றாள்
காதல் போதையில் மனம் தள்ளாட
அண்ணார்ந்து பார்த்தேன் வானத்தை
அங்கே ஆயிரம் பட்டாம் பூச்சிகள்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (13-Sep-20, 2:39 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 326

மேலே