ஆலயம் தொழுவது சாலவும் நன்று

தென்காசி யில்பிறந் தென்பயன் காசியீசன்
அன்னைதன் தாள்தொழா மல் !

சிவகாசிப் பட்டாசு தீவாளி யில்தினம்
செய்சிவ நாமாவோ சை !

குற்றாலத் தில்குளித் தால்மட்டும் போதுமா
ஆலயம் செல்லவேண்டா மா ?

மதுரை அழகுநாற் கோபுரம் நல்லழகு
சொக்கிசொக்கன் பேரழகு பார் !

மெரீனாவில் பூங்காற்று வாங்கி யதுபோதும்
மைலைக் கயிலையைக் காண் !

எழுதியவர் : கவின் சாரலன் (14-Sep-20, 10:46 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 54

மேலே