ஆலயம் தொழுவது சாலவும் நன்று

தென்காசி யில்பிறந் தென்பயன் காசியீசன்
அன்னைதன் தாள்தொழா மல் !
சிவகாசிப் பட்டாசு தீவாளி யில்தினம்
செய்சிவ நாமாவோ சை !
குற்றாலத் தில்குளித் தால்மட்டும் போதுமா
ஆலயம் செல்லவேண்டா மா ?
மதுரை அழகுநாற் கோபுரம் நல்லழகு
சொக்கிசொக்கன் பேரழகு பார் !
மெரீனாவில் பூங்காற்று வாங்கி யதுபோதும்
மைலைக் கயிலையைக் காண் !