முகநூல் பதிவு 115

நீண்ட நாள் கனவு இன்று நிறைவேறியது.....ஏதோ பெரிய சாதனை படைத்துவிட்டது போல் உணர்வு...... பல ஆண்டுகளுக்கு முன் தென்காசி விசுவநாதர் ஆலயத்திற்கு இராஜ கோபுரம் கட்டி அதற்கு குடமுழுக்கு நடந்த போது நான் தென்காசியில் குடியிருந்தேன்.... அந்த விழாவிலும் கலந்துக் கொண்டேன்.... அப்போது அம் மாபெரும் சாதனை செய்த ஐயா சிவந்தி ஆதித்தனை(இரண்டாம் பராக்கிரம்ப் பாண்டியன்) தொலைவிலிருந்து பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது..... அவர் வரலாற்றை கவிதை வடிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கும் என்று கற்பனைக்கூட செய்து பார்த்ததில்லை.......இன்று சகாப்த நாயகனின் பிறந்தநாள்......இன்று என் கவிதையை அவருக்கு சமர்பித்தேன்.... அவர் நினைவு மண்டபத்தில் வைக்க அன்புடன் அனுமதி தந்த திரு. பாலசுப்ரமணியம் ஆதித்தன் அவர்களுக்கும்..... நேரில் பார்த்து ரசித்து என்னை ஆசிர்வதித்த திருமதி. மாலதி சிவந்தி ஆதித்தன் அவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன்!

எழுதியவர் : வை.அமுதா (25-Sep-20, 8:33 am)
பார்வை : 52

மேலே