அழகு
என் சித்தம் நிறைந்த
உன்னைப் பற்றி எழுத
எண்ணம் கொண்டு
வார்த்தைகள் தேடி
அலையும் பித்தனானேன்...
ஆனால் இன்னும் ஏனோ
வார்த்தைகள் கிட்டவில்லை
கிட்டிய வார்த்தைகள் கொண்டு
கோர்த்த வரிகளை
படித்து படித்து பார்த்தேன்
அதை கிழித்து போட தான்
மனம் உளரல் இடுகிறது...
காரணம் அது எதுவும்
உனக்கு ஈடாகவில்லை...