உன் கோபம் என்னை மௌனமாக்குதடி 555

***உன் கோபம் என்னை மௌனமாக்குதடி 555 ***





ப்ரியமானவளே...


என்கிருந்தோ வந்தாய்
என் வாழ்வில்...

சின்ன சின்ன
சண்டைகள் போட்டாய்...

என்னை முழுமையாக
சிறை எடுத்தாய்...

என்னை
சமாதானபடுத்த
அவ்வப்போது...

சில கண்ணீர்

துளிகளை கொடுப்பாய்...

நான் உன்னிடம்
பேசவரும் போதெல்லாம்...

உன் கோபம்
என்னை
மௌனமாக்குதடி...

என் உள்ளத்தை
கொள்ளை
கொண்டவளும் நீதான்...

என் உயிரை எடுத்து
கொண்டு
இருப்பவளும் நீதான்...

துடிக்கும் என் இதயம்
கூட எனக்காக இல்லை...

உன் நினைவால் உனக்காக
துடிக்குதடி எப்போதும்...

வீசும் வெப்ப காற்று நீ
வந்தால் தென்றலாக வீசுதடி...

நிலையில்லா என் வாழ்வில்
நிலையாக நீ வர வேண்டுமடி...

என்னை உன் நினைவுகளின்
அலைகளில் தத்தளிக்க வைக்கிறாய்...

கோபம் கொண்ட
செல்லக்கிளியே...

என் கைகளில்
வந்துவிடடி நீ.....


எழுதியவர் : முதல் பூ பெ.மணி (5-Oct-20, 4:14 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 461

மேலே