எது கொடிது

உணவேதும் இல்லாமல்
இருந்தாலும் உண்ணாமல்,
காரணங்கள் தோணாமால்,
உடலோடு வயிறு செய்யும்- போர்
பசியும் கொடிதல்ல

கண்ணீர் ததும்பும் முகங்கள் சூழ
காற்றோடு மனம் கலக்க
இமை இரண்டும் தான் கலக்க
உயிர் பிரியும் தருணமும் கொடிதல்ல.

காற்றில் கானம் படி, கவிதையாய்மொழிகள் கூறி
கைகோர்த்து நடந்த கடற்கரை துறந்து,
உனக்கு பிடித்த பாடல் கேட்டு ,
மனதில் உன்னை சுமந்து, கொட்டும் மழையில்
கண்ணீர் கரைய, என் மகிழ்ச்சியும்
மெதுவாய் குறைய
நானிருக்கும் தனிமையே கொடிது.

எழுதியவர் : சந்தோஷ் பவன் (6-Oct-20, 3:41 pm)
சேர்த்தது : santhosh bhavan
பார்வை : 101

மேலே