மௌன ராகம்

உன் நினைவில் ஒரு
சோகம்.
அதிலே எழுகின்றது
தனிமையில் ஓர் இனிய
ராகம்.

கனியாத காயாக
நானும்.
கனி தேடிடும் கிளியாக
நீயும்.

புலரும் பொழுதெல்லாம்
ஏமாற்றம்.
பொழுது செல்லச் செல்ல
தடுமாற்றம்.

உன் குரல் தேன் தமிழில்
உரைத்திடையிலே .
எனக்குள் நிறைகின்றது
இன்ப வெள்ளோட்டம்.

நீ நிறுத்தி சென்று விட்டால்
மறு கனம் வறட்சி
நோக்கி விரைகின்றது
எந்தன் மன வாட்டம்.

ஒத்தையிலே நித்தம்
நான் பாடும் ராகம்
உன் நினைவினால்
பிறந்திடும் மௌனராகம்.

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (8-Oct-20, 6:56 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : mouna raagam
பார்வை : 500

மேலே