வெற்றி காணும்

நிலத்தில் விளைந்த
நெற்கதிர்கள்
முற்றியதும் தலை கவிழும்
மறக்காமல் மண்ணை நோக்கும்
அதுபோல

முதிர்வும், பக்குவமும் அடைந்த
மனிதரின் உள்ளம் என்றும்
அடக்கத்துடன் பணிந்து
அமைதியாய் காணும்
எளிமையாய் காட்சி தரும்

அன்போடு அடக்கமும்,
அச்சமின்மையும், சமூக நலனும்
இருக்கும் மனதில், நல்ல பண்பு
நிறைந்திருக்கும்—அது
பணிவு தரும், வெற்றி காணும்

எழுதியவர் : கோ. கணபதி. (31-Oct-20, 10:09 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : vettri kaanum
பார்வை : 57

மேலே