உன் மனதில் குடியேற வழி சொல்லடி 555

***உன் மனதில் குடியேற வழி சொல்லடி 555 ***





ப்ரியமானவளே...


மார்கழிமாத மாகோலம்
உன் வாசல் எங்கும் பூகோளம்...

எனக்குள் மணக்கோலம்
போட்டு காத்திருக்கிறேன்...

உன்னை
மட்டும்
நினைத்து...


நீ வாசலில்
வைத்த பூ வாடிவிடுமடி...

உன்னை சுமக்கும் என் இதயத்தை

நீ வாட வைப்பது ஏனடி...

உன்னாலே மாக்கோலம்
போட கற்றுகொண்டேன்...

உன் மனதில்
குடியேற
வழி சொல்லடி...

மாக்கோலத்தில் விழுந்த
சில
மழைதுளிக்கா
க வருந்துகிறாய்...

உன்னை நினைத்து
தினம்
வெந்நீரில் நனையும்...

என் இதயத்தை நீ எப்போது
உணர்வாய் என் கண்ணே...

அம்மி மிதிக்
நான்
காத்திருக்கிறேன்...

அருந்ததி பார்க்க நீயும்
வந்துவிடடி என்னருகில்.....


எழுதியவர் : முதல் பூ பெ.மணி (15-Nov-20, 9:20 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 488

மேலே