உனக்கென்ன வரம் வேண்டும்

பசுமை சூழ்ந்து
பறவைகள் கூச்சலிட

இயற்கையின் வாசனை
இதுவென உணர்ந்திட

காமம் கலக்கா காதலை போல்
கார்மேகம் பொழியும் களங்கமற்ற தூறல்,சாரல்

கொளுத்தும் அளவில் கதிரவன் அல்லாமல்
போர்த்தும் அளவில் பனிபொழிவில்லாமல்

ஆழமில்லாமல் அடர்ந்து
அளவில் சிறிதும் பெருதுமாய்
அழகாக நெய்த மரங்கள்

நானும் என் அன்பனும்
நடையிட சிறுபகுதி

உனக்கென்ன வரம்வேண்டுமென
இறைவன் கேட்க
உரைத்துமுடிப்பேன் இத்துணையும்.

எழுதியவர் : ஷாகிரா பானு (21-Nov-20, 3:55 pm)
சேர்த்தது : Shagira Banu
Tanglish : unakena varavendum
பார்வை : 455

மேலே