கோயில் பிரசாதம்

கோயில் பிரசாதம்

நேரிசை வெண்பா

தேனுண் னவரும் மிஞிறுரீஇங் காரமும்
தானுங் கவர்பூவும் பக்தரையும் -- தோனும்தோள்
மாலைசிவ சக்திசாதம் நீறும் மனாலமீவர்
மாலைத் தொழத்துளசி யாம்



கோயில்கள் பக்கத்தில் பூந்தோட்டம் இருக்கும். இந்தப் பூந்தோட்டப் பூக்கள் வாசனை
தேனீக்கள் ரீங்காரமிட்டு வரும்படி செய்யும். பக்தர்களையும் இப்பூந்தோட்டம் கவரும்.
இதே பூக்கள் கடவுளர் சிலைகளின் தோளுக்கு சாத்தும் மாலைகளாகவும் மாறும்.
கோயில்களில் சிவனென்றால் திருநீறும் சக்தியென்றால் குங்குமமும் மாலவன்
என்றால் துளசியும் பிரசாதம் வழங்குவர்.


.......

எழுதியவர் : பழனிராஜன் (26-Nov-20, 7:13 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 67

மேலே