காதலும் கடவுளும்

.உருவில்லாதது ஆனால் உணரக்கூடியது
உண்மையானது என்றாலும் காணமுடியாதது
உணர்ந்தோரால் பிறருக்கு உணர்த்தமுடியாதது
காணப்பெற்றோரால் காட்சிப்படுத்த இயலாதது
இதனை உணர்ந்தோர் இயல்பிலிருந்து மாறுபாடாய்
வேண்டியது விருப்பப்படி அருகாமையில் வரும்
வேண்டப்படாத துர் சேர்க்கையும் இயைந்தே வரும்
விலக்க வேண்டிய மனம் விலங்கிட்டுக்கொண்டால்
விடைக்காண முடியாத விவகாரங்கள் விண்ணளவுக்கு
உடலுக்கு உரியதை மட்டும் உட்கொண்டாலே
உலகு உள்ளவரை கதிர் போல் நீள் புகழில்
மனம் பிழர்ந்து மயங்கி விட்டால் துர்நாற்ற வாயுவாய்.
------- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (30-Nov-20, 8:41 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 62

மேலே