உன் மார்போடு என்னை அனைத்து கொள்ளடி 555

***உன் மார்போடு என்னை அனைத்து கொள்ளடி 555 ***


என்னுயிரே...

மீண்டும் நான் மண்ணில்
பிறக்க வேண்டும்...

உன் பூ கரம்
பற்ற வேண்டும்...

தித்திக்கும் உன்
தேன் இதழ்களால்...

நித்தம் நீ முத்த
மழை
பொழிய வேண்டும்...

உன்னை அடித்து
கடிக்கும் போதெல்லாம்...

கோபம் கொள்ளாமல்
கொஞ்சி ரசிக்க வேண்டும்...

என் கண்கள்
கலங்கும் போதெல்லாம்...


உன் மார்போடு என்னை
அனைத்து கொள்ளவேண்டும்...

பசி எடுக்கும்
நேரமெல்லாம்...

என்னை கொஞ்சி
உணவூட்ட வேண்டும்...

இன்று நீ
என்னை வெறுக்கிறாய்...

எப்போதும் என்னை
வெறுக்காத ஜீவனாக வேண்டும்...

நீ என் தாயாக
நான்
உன் மழலையாக...

உயிர்
கொண்
என்
உறவே...

மீண்டும் என்னை
கொஞ்சவேண்டும் நீ.....


எழுதியவர் : முதல் பூ பெ.மணி (19-Dec-20, 9:12 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1357

மேலே