காணோமா நாம்காணோமா

காணோமா நாம்காணோமா

நேரிசை வெண்பாக்கள்


ஒவ்வொரு நாளாய் மறையுது ஓருயிர்
எவ்வண் ணிதுசாத்யம் பெண்ணேசொல் -- எவ்வத்தை
எவ்வகை நீக்க இயம்புவாய்நீ யும்பெண்ணே
அவ்வகை காப்போம் வுயிர்

வண்ணான் இருந்துபெட்டி போடக் கழுதையைக்
கண்ணாலேக் காண முடியவில்லை -- வெண்புரவி
லாயமுண்டு நாட்டிலே லாயக்காய் ஒன்றில்லை
பாயக் குதிரை யுமே

எலியும் பெருச்சாளி இங்கிருக்க இல்லை
எலிபிடிக்கும் பூனை புவியில் --. கலியில்
நகரப் பசுவில்லை நல்லபாலு மில்லை
முகடி யொழித்ததெல்லாம் பார்


ஒட்டைப் புலிசிங்கம் ஓடுஞ் சிறுத்தையும்
பட்டைக் குதிரையும் காணோமாம் -- நட்டமாம்
சுட்டே அழித்தார்பார் கூண்டோடே வெள்ளையர்
சுட்டார் கடல்வானி லும்

......

எழுதியவர் : பழனிராஜன் (6-Jan-21, 10:45 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 57

சிறந்த கவிதைகள்

மேலே