காணோமா நாம்காணோமா
காணோமா நாம்காணோமா
நேரிசை வெண்பாக்கள்
ஒவ்வொரு நாளாய் மறையுது ஓருயிர்
எவ்வண் ணிதுசாத்யம் பெண்ணேசொல் -- எவ்வத்தை
எவ்வகை நீக்க இயம்புவாய்நீ யும்பெண்ணே
அவ்வகை காப்போம் வுயிர்
வண்ணான் இருந்துபெட்டி போடக் கழுதையைக்
கண்ணாலேக் காண முடியவில்லை -- வெண்புரவி
லாயமுண்டு நாட்டிலே லாயக்காய் ஒன்றில்லை
பாயக் குதிரை யுமே
எலியும் பெருச்சாளி இங்கிருக்க இல்லை
எலிபிடிக்கும் பூனை புவியில் --. கலியில்
நகரப் பசுவில்லை நல்லபாலு மில்லை
முகடி யொழித்ததெல்லாம் பார்
ஒட்டைப் புலிசிங்கம் ஓடுஞ் சிறுத்தையும்
பட்டைக் குதிரையும் காணோமாம் -- நட்டமாம்
சுட்டே அழித்தார்பார் கூண்டோடே வெள்ளையர்
சுட்டார் கடல்வானி லும்
......