ஆற்றின் நடுவில்
ஆற்றின் நடுவில்
அங்கங்கு காணப்படும்
சின்ன சின்ன
கற்கள் உருவமாய்
இவைகள் சிற்பிகள்
செதுக்கிய சிலைகள்
அல்ல
ஒவ்வொன்றும் ஒவ்வொரு
உருவமாய் !
சின்ன சின்ன சிதறல்
காயங்கள் இல்லாமல்
மழு மழுவென்று
செதுக்கி இருக்கிறது
இதை வடித்தவன்
இந்த ஆற்றில்
உருண்டோடும் நீர்
என்பதாலோ !