வாழ்க்கை

அளவுக்கு மீறிய பளு சுமக்கும்
கள்ளமில்லா வண்டி மாடு இவனது
சுமையையும் சேர்த்து இழுக்க அதை
இது போதாதென இவன் சாட்டையால்
அடிக்க மெல்ல நகரும் மாடு
கண்ணீர் தெளும்புகிறது அதன் கண்ணில்
பாவம் பேச தெரியா ஜீவன்
எல்லாம் தெரிந்தும் ஆறறிவு மனிதன்
இப்படி நடப்பதேன் தெரியலையே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Jan-21, 2:41 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 158

மேலே