உயிரெழுத்துக் காதல்

அழகுக்கே அழகூட்டிய என்னவளே
ஆயிரம் முறை உன்னை நினைக்க வைப்பவளே
இன்று என்னை காதல் கடலில் தள்ளியவளே
ஈராயிரம் ஆண்டுகள் மனதில் நினைக்க வைப்பவளே
உலகப் பேரழகிகளை மொத்தமாய் தோற்கடித்தவளே
ஊர் ஊராய் உன்னைத் தேடி அலைய விட்டவளே
எப்போதும் என் அருகில் நில்லடி
ஏழேழு ஜென்மமும் என் உயிர் துறந்துக் காப்பேன் நானடி
ஐயம் வேண்டாம் காதலியே
ஒரு நாள் உன்னை மணப்பெண் கண்மணியே
ஓலைச்சுவடியில் உள்ளது என்பதை மறுக்காதே
ஒளவையமும் போற்ற வாழ்வோம் என்னவளே
அஃதிலார் எல்லாம் நம்மை வாழ்த்த வரட்டும் துணையானவளே.

எழுதியவர் : ரமணிராஜா (4-Feb-21, 9:49 am)
சேர்த்தது : ரமணிராஜா
பார்வை : 165

மேலே