மாங்கனி சுவையாள் நீ

மாங்கனியை
பார்த்தவுடன்
சுவைப்பதற்கு முன்பே
பொதுவாக எல்லோர்
நாக்கிலும் எச்சில் ஊறும்...!!

உடனே அருகில்
இருப்பவர்கள்
கனி சுவையாக
இருக்குமென்று
சொல்வார்கள் ..!!

ஆனால் ..
என் இனியவளே
மாங்கனி போல் இருக்கும்
உன்னை பார்த்தவுடன்
என் நாவில் எச்சில் ஊறினால்...!!

உடனே அருகில் இருப்பவர்கள்
"ஜொள்ளு" விடுகிறேன் என்று
பரிகாசம் செய்கிறார்கள் ..!!

விந்தையான
உலகத்தில்
மனிதர்களின்
வித்தியாசமான
கருத்துக்கள்..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (5-Feb-21, 10:23 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 143

மேலே