ஏன் மௌனமோ

கவிஞன் என்காதினில் கவிதைகள் நூறு பாடுகிறாய்
காதலனிடம் அவள் பேசும்போது இதழ்களில் மௌனம் ஆகிறாய்
காதலுக்கு ஒரு நியாயம் கவிஞனுக்கு ஒரு நியாயமா பொதிகைப் பூந்தமிழே
இதழ்கள் மொழிந்து விட்டால் காதலின் மெல்லொலிகள் மறந்துபோம் என்ற
கவிஞன் ஷெல்லியின் காதல் தத்துவமோ ?

When the lips have spoken,
Loved accents are soon forgot.
----என்று ஒரு கவிதையில் சொல்வான் ஷெல்லி
அவனை போற்றும் முகமாக எழுதிய கவிதை .
கவிதா நதி தீரத்திலே புகுதியில் அந்த இனியாகவிதை பற்றி சொல்கிறேன்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Feb-21, 10:53 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 66

மேலே