அவள்

புருவமேனும் வில்வளைத்து பார்வை எனும் அம்பெய்தி வதைக்கிறாள் மனதை..
பசிதீர்க்கும் பாச பேச்சுக்கு சொந்தக்காரி..
நான் தீண்டும் நொடியேல்லாம் நாணம் கொண்டு மழைத்துளி தீண்டும் நொடியேல்லாம் வரவேற்கும் வஞ்சகி..
என் முன் உதிர்க்கும் உதட்டு புன்னகையில் கஞ்சம் காட்டும் கஞ்சக்காரி..
பார்த்து பார்த்து மருக நினைக்கும் வெட்கத்தை இரு கைச்சிறைக்குள் மூடி மறைக்கும் இரக்கம் குறைந்தவள்..
ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும் என் மனதை ஓய்ந்திருக்க வைத்த மாயக்காரி..
அவள் என்னவளாக ஆகும் நாளுக்காய் ஏங்கிநிற்கும் "அவளின்" அவனாக நான்..

எழுதியவர் : கண்ணணின் மீரா (17-Feb-21, 10:52 am)
சேர்த்தது : கண்ணனின் மீரா
Tanglish : aval
பார்வை : 278

மேலே