நீ தேநீர் அருந்துகையில்
தென்றல் மெல்ல வீசுகையில்
மாலை நிலா மௌனமாய் ஒளி பொழிகையில்
நீ தேநீர் அருந்துகையில்
நான் உன் முன் நிற்கையில்
கோப்பையில் இதழ் பதித்து உறிஞ்சியவரே
என்னை நீ நிமிர்ந்து பார்க்கையில் ...மெல்லப் புன்னகை உதிர்க்கையில்
தேநீர் உன் இதழில்
தேன்சொட்டுக்கள் என் நெஞ்சில் ....