முகநூல் பதிவு 316
9.2.2020
நீட் தேர்வில் முறைகேடு
குரூப் 1 தேர்வில் முறைகேடு
TNPSC தேர்வில் முறைகேடு
காவலர் தேர்வில் முறைகேடு........
யார் காரணம்....????
எதையும் உறுதியாய் முடிவெடுக்க இயலாத மாநில அரசு.....
முடிந்தவரை கொள்ளையடித்து வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள மனசாட்சி இன்றி செயல்படும் பொறுப்பற்ற தகுதியற்ற சான்றாண்மையற்ற சுயநல அரசு அதிகாரிகள் பணியாளர்கள்.....
எப்படியேனும் எந்தக் குறுக்குவழியிலேனும் எவ்வளவு லஞ்சம் கொடுத்தேனும் அரசு பணியில் தன் பிள்ளைகளை அமர வைக்கத் துடிக்கும் பெற்றோர்கள்......
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை
அத்தனை முறைகேடுகளுக்கும் உறுதுணையாக இருக்கும் காவல்துறை.....
முறைகேடுகள் அம்பலமாகும் நிலை வந்தால்..... முக்கியப் புள்ளிகள் முகத்திரைகளுக்கு மென்மேலும் பாதுகாப்புக் கவசமிடும் நீதித்துறை.......
ஹூகும்...... நாட்டைக் காப்பற்றவே முடியாது......