நீ எனும் கவிதை
கவிதை என்பது வெறும் எழுத்து
என நம்ப மறுக்கிறது
என் இதயம்
உன் வருகையின் பின்னே.....
உன் (க)ருணையிலும் கவிதை கண்டேன்...
உன் (கா)தலிலும் கவிதை கண்டேன்.
உன் (கி)ளிப்பேச்சிலும் கவிதை கண்டேன்...
உன் (கீ)ச்சுக்குரலிலும் கவிதை கண்டேன்.
உன் (கு)றும்பிலும் கவிதை கண்டேன்...
உன் (கூ)ந்தலிலும் கவிதை கண்டேன்.
உன் (கெ)ஞ்சலிலும் கவிதை கண்டேன்...
உன் (கே)ள்விகளிலும் கவிதை கண்டேன்.
உன் (கை)வளையல்களிலும் கவிதை
கண்டேன்...
உன் (கொ)ஞ்சலிலும் கவிதை கண்டேன்.
உன் (கோ)பத்திலும் கவிதை கண்டேன்...
உன் (கௌ)வுகையிலும் கவிதை கண்டேன்.
இத்தனையும் கண்ட பின்
எப்படி நம்பும் என் இதயம்
கவிதை என்பது வெறும் எழுத்து
மட்டும் என்று....