நெருங்க முடியாதவள்

அவள் விழுந்ததை ஊரே கண்டது
யாரும் உதவிக்கு வரவில்லை!
அவள் அழகை எல்லோரும் ரசித்தனர்
யாரும் நெருங்க நினைக்கவில்லை!அழும்போதுகூட அவள் அழகுதான்! எல்லோருக்கும் அவள் மேல் காதல்
ஆனால் கூறுவதற்குள் ஓடி மறைந்து விட்டாள்
................................. மழை.....................................

எழுதியவர் : அசோக் (29-Mar-21, 6:47 pm)
சேர்த்தது : அசோக்
பார்வை : 1278

மேலே