மங்கை ஒருத்தி வந்து மலரிதழை முத்தமிட

மலர் மஞ்சத்தில் உறங்குது வண்டு
தேனருந்திய மயக்கத்தில்
தென்றல் வந்து வருடிட
சிறகு விரித்து பறக்குது வானில் !
மங்கை ஒருத்தி வந்து
மலரிதழை முத்தமிட
மீண்டும் தேனில் ததும்புது மலர் !

எழுதியவர் : கவின் சாரலன் (3-Apr-21, 9:40 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 61

மேலே