ஆத்மா
உன்னிதயத்தில் உனது ஆத்மா என்றார்
உன்னதமான சித்தர் அவர் அதற்கு
அலட்சியமாய் இறுமாப்போடு எங்கு
என்று வினவ சித்தர் சொன்னார்
உனக்கு 'இதயம்' இருந்தால் அங்கு
என்றார் ஒன்றும் புரியாது அவன்
திருதிருவென்று விழித்தி டவே