காதல்

தேர்ந்தெடுத்த ஓவியன் கூட ஒருவேளை
உன்பேர் அழகைச் சித்திரமாய் தீட்ட
முடியாது விழிப்பானோ எப்படி கவிஞன்
நான் உன்னழகிற்குஓர் கவிதை எழுத
முடியாது தவிப்பது போல அடியே
அதனால் தான் உன்னை நான்
என் தேவதையே என்று அழைக்கின்றேன்
தெரிந்து கொள் நீ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Apr-21, 7:17 pm)
Tanglish : kaadhal
பார்வை : 257

மேலே