சோழவந்தான் கன்னியப்பர்
குறட்பாக்கள்
சோழவந்தான் கன்னியப்பர் சோர்விலா(து) எல்லோரும்
வாழவைத்த செல்வந்தர் வாழ்த்து! ௧
செல்வம் மிகப்பெற்றுஞ் சிந்தையில் நல்லோனாய்
ஒல்லுவகை வாழ்தல் உயர்வு! 2
இருகுறள் இணைப்பு வெண்பா
சோழவந்தான் கன்னியப்பர் சோர்விலா(து) எல்லோரும்
வாழவைத்த செல்வந்தர் வாழ்த்துப் - பொழிவுடன்
செல்வம் மிகப்பெற்றுஞ் சிந்தையில் நல்லோனாய்
ஒல்லுவகை வாழ்தல் உயர்வு.
- வ.க.கன்னியப்பன்
மரபுப் பாக்களில் பொழிப்பு மோனை அமைதல் சிறப்பு.