நம் நிலை என்ன

விழி என்பதை திறந்தேன்.
விடிந்தது எனறு.
கொரானா ஒழிந்தது என்று இருந்தேன்.
சுதந்திரம் வந்ததென்று!
அடிமைகளாய் இருக்கிறோம் கண்ணுக்கு தெரியாத கிருமிகளின் ஆட்சி ஆதிக்கத்துக்குள்.

முக கவசத்துக்குள் மனிதர்கள்
மனிதம் இழந்த உறவுகள்
பயந்த வாழ்க்கை பயணங்கள்.
வாழும் வாழ்க்கையின் பொருள் என்ன?

குழந்தையின் பூமுகம் வாடின.
குதுகூலம் ஒழிந்து மனம் குறுகின.
வருங்கால குழந்தைகளின் நிலை என்ன?
வாழ்வோமா? இனி நம் நிலை என்ன?

எழுதியவர் : சு.இராமஜோதி (22-Apr-21, 11:14 am)
சேர்த்தது : ராமஜோதி சு
Tanglish : nam nilai yenna
பார்வை : 150

மேலே