அவரவர் விருப்பம்
கோயில் வாசலில் இருவர் பாதசாரிகள்
கோயிலில் இருந்து வந்த ஒலி
ஒருவன் காதில் ' கஞ்சி வரதப்பா'
காஞ்சிபுர சுவாமி வரதப்பன் வருகிறார்
பவனி என்று.... மற்றொருவன் காதில்
'வெறும் கஞ்சி (உணவு) வருகுதப்ப...
முதல்வன் அகப்பசியில் வாடுபவன்....
இரண்டாவது மனிதன் வயிற்று பசியில்
வாடுபவன்...... இருவருக்கும் கடவுள்
தரிசனம் கிடைத்தது.... அவரவர் விருப்பம் போல !!!!