அவள் முல்லையை சூடினால் மல்லிகை வாடும்

ஆடாத மலரும் இல்லை வாடாத மலரும் இல்லை
அவள் சூடாமல் போனால் தென்றலில் ஆடும் மலரும்
வாடி நிற்கும்
அவள் முல்லையை சூடினால் மல்லிகை வாடும்
மல்லிகையைச் சூடினால் ரோஜா வாடும்
ரோஜாவைச் சூடினால் செண்பகம் வாடும்
செண்பகத்தை அவள் சூடினால் ......
ஆயிரமாய் பூத்திருக்கும்
மலர்களின் பட்டியல் போடவேண்டும் !

எழுதியவர் : கவின் சாரலன் (30-Apr-21, 11:09 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 69

மேலே