பாண்டுவும் மாண்டார்

பல்சுவை கலைஞன் பாண்டுவும் மாண்டார்
கிரீட நோயின் கிடுக்கிப்பிடி இறுக்கமாய்
எவரிடமும் கருணைக்காட்டாமல் கோரமாய்
வரை கலையில் சிறந்து வளர்ந்த பாண்டு
திரைகலையிலும் வாகை சூடியே வலம் வந்தார்
இடுச்ச புளி செல்வராசின் தம்பியான இவர்
இலகுவாய் எவர் மனதிலும் புகும் பாங்கானவர்
"உன் பணம் பணம் என் பணம் பணம்" என்ற பாடலில்
உள்ளங் கொள்ளைக் கொள்ளும் சிரிப்பையும்
'காதல் கோட்டை' படத்தில் அலங்கார பெருமையையும்
சொன்ன நகைச்சுவை அருமருந்து
நச்சுக்கிருமிக்கு மாண்டதோ பெருங்கொடுமை.
-------நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (6-May-21, 9:22 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 38

மேலே