மணாளன்
உயர்ந்தவனே!
அன்று என்னை நிமிர்த்தியது உன் உயரம் ...
இன்றுவரை என்னை உயரத்தில் வைத்து!!!
வரையப்படாத ஓவியத்தின்
வண்ணங்களாய் சிதறிக் கிடந்தேன்
நான்..!
அழகிய ஓவியமாக எனை மாற்றினாய்!!!
என் கோபங்கள் உன் பார்வை முன் மட்டும்
சிரிப்பாக மாறும் மாயமென்ன??
மேற்படிப்பு படி என்றாய்...
உனக்கு பிடித்தது பிடிக்காதது மட்டுமே நான் படித்த மேற்படிப்பு...
உனக்கு மட்டுமல்ல உன் உறவுகளுக்கும் நான் முக்கியமென முன்நிறுத்தினாய்...
காதலியாகி மனைவியானேன்...
இன்றுவரை உன் மூத்தமகள் போல் எனைத் தாங்கியதற்கு நன்றி!!!
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்❤️