நண்பர் சுப்ரமணி அவர்களுக்கு இரங்கற்பா
நீங்கள் பண்ருட்டியில்
வாழ்ந்த பண்பாளர்
உங்கள் மரணம்
எங்கள் மனதில்
ஏற்படுத்தியது
மா ரணம்
உங்கள் அடக்கம்
எங்கள் இன்பத்தையும்
சேர்த்து செய்தது அடக்கம்
உங்கள் மறைவின் துக்கம்
மறைந்து போனது
எங்கள் தூக்கம்
மூடியது உங்கள் கண்கள்
திறந்தது எங்கள்
இதயத்தில் புண்கள்
உங்கள் இறப்பு
எனும் பூ எங்கள்
கண்ணீர்த்துளிகளை
அல்லவா தாகத்திற்கு
குடித்தது
நீங்கள் இழந்ததோ உயிர்
நாங்கள் உயிரைத் தவிர அனைத்தையும் இழந்தோம்
ஏ இறைவா
இவருக்கு
ஏன் கொடுத்தாய்
ஆயுளை குறைவா
ஏ இறைவா
அண்ணன் சுப்ரமணி
வாழ்ந்த மணி அதிகம்
என்றா அவரின் முடிவிற்கு
மணி அடித்தாய்
உங்களை புதைக்கவில்லை
விதைத்திருக்கின்றோம்
நீங்கள் மீண்டும்
உருவக வேண்டும்
நம் குடும்பத்தில்
கருவாக வேண்டும்