எந்தன் நீ
நான் பாடும்போது என்
பாட்டின் ராகமடி நீ
நான் எழுதும்போது என்
கவிதையின் அடிகளடி நீ
நான் பேசும்போது என்
நாவின் இன்சொல்லடி நீ
நான் உறங்கும்போது என்
உறக்கத்தின் இனிய என்
கனவாய் கனவு கன்னிகையாய்
வருபவளும் நீதானடி தங்கமே