விடியும் வரை இப்படியே கழியட்டும்

உறக்கம் வரவில்லை!
உயிரே உன் நினைவால்!

கனவும் வரவில்லை!
கவிதை உன் வரவால்!

உள்ளுக்குள்ளே உன் முகம் வெண்ணிலவாய் உதயமானது!

உன் அழகை வியந்து என்னை கொஞ்சம் மறந்து கண்ணுக்குள்ளே ரசித்து பார்த்து கொண்டிருக்கிறேன்!

வானத்து விண்மீனாய் கண்சிமிட்டி அழைக்கிறாய்!
வாண நதியிலே குளித்து விளையாட அழைக்கிறாய்!

உன்னை கண்டு ரசித்துக்கொண்டே இரவு பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறேன்!

விடியும் வரை இப்படியே கழியட்டும்!

எழுதியவர் : சுதாவி (10-Jun-21, 11:00 pm)
சேர்த்தது : சுதாவி
பார்வை : 123

மேலே