கொரோனா

உலகமனைத்தும் சமணம் ஏற்றது - ஒரே நாளில்
கொரோனாவால்! -முகவாய் மூடி

எஞ்சி இருக்கையிலே விஞ்சி ஓடினோம்
அஞ்சி நெருங்கையிலே மிஞ்சலையே - தடுப்பூசி

காடு வெட்டி நாடு கண்டோம் - இன்று
காற்று தேடி மூச்சு போகுது - ஆக்சிஜன்

கூடி பழகி குலாவச் சொன்னோம் -
ஒற்றுமை பேண -இன்று

கூடாது விலகி வாழ செய்கிறோம்
கொரோனவிலிருந்து காக்க

தேகம் நலிவுற்றார் நலம் விழைய
அகம் புகுந்து விளிப்பதுண்டு- அன்று

கதவு ஜன்னல் தாழிட்டதுமன்றி
காத தூரம் கதற ஓடவும் விட்டதே

எழுதியவர் : து. கிருஷ்ணமூர்த்தி (11-Jun-21, 3:06 pm)
பார்வை : 87

மேலே