அவளுக்காக
காதலெனும் வண்ணம் தீட்டி
காத்துக் கிடக்கிறேன் அவளுக்காக
என் விழிகளின் ஏக்கம்
புரியவில்லை அவளுக்கு
பாவி
சாதாரணமாக செய்துவிட்டால்
என் மனதுக்குள்
அவள் வருகையை
தத்தளிப்பது
நான் மட்டும் அல்ல
எனக்குள் இருக்கும் அவளை
காக்கும்
என் காதலும்தான்