கோவைக்காய் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(‘ற்’ ‘த்’ வல்லின எதுகை)

வாயின் அரோசகம்போம் மாறா அழலையறும்
நோயிற் கபமகலும் நுண்ணிடையே - தூயவதன்
வற்றற் கருசி மருவுகரப் பான்போகுஞ்
சுத்தக்கோ வைக்காயைச் சொல்

- பதார்த்த குண சிந்தாமணி

கோவைக்காய் சுவையின்மை, வெப்பம், சுரம், கபம் இவற்றை நீக்கும்; இதன் வற்றல் உணவில் வெறுப்பு, கரப்பான் இரண்டையும் நீக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Jun-21, 8:46 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே