பொக்கிஷமான நினைவு

காற்றின் கைகள் ..உன்
காதணியைக் காதலித்த
கற்பனைற்ற கணங்களில்
கார்மேகத்தின் உடலுடைத்த
காவிய தூரல்கள் புவியெங்கும் ...

காலின் இடையருகே ..உன்
கரு மச்சத்தின் உச்சத்தில்
கடவுளின் ரேகையாய்
காலங்களின் கதவடைத்த
கற்பக கனவுகள் கரமெங்கும் ...

திகட்டாத திரவத்தில் ..உன்
திரைமறைவும் திரிந்து விழ
திசைமாறிய தீபங்களில்
தீர்ந்துவிட்ட திறன்களால்
திரட்டியக் காதல் தேகமெங்கும் ..

புருவத்தின் அசைவுகள் ..உன்
புடவையிலும் பொங்கி வர
புலராத புலமைக்குள்
பூப்படைந்த புதுக்கவியின்
புன்னகைப் புதிர்கள் முகமெங்கும்

பொய் மெய்யாய் பல கவிகள் புனைந்தேன்..
பொய்யல்ல அவை மெய் என உனர்ந்தேன்
பெண்னே உன் கரம் பிடித்ததும் ..
பொக்கிஷமான நினைவுகளோடு..நான்

எழுதியவர் : சம்பூரான் தஜன் (21-Jun-21, 6:53 pm)
சேர்த்தது : சம்பூர் சி தஜன்
பார்வை : 54

மேலே