புழம்பல்

அன்று காலை அவசர வேளை
வந்தது கைபேசியில் வழக்கின் முடிவு
அது எனக்கான சட்டம்
அரசுக்கு அதில் பெருநாட்டம்

ஊர்தியில் ஒரு பயணம், மரியாதையுடன்
ஆச்சரியம் அயலோர் கண்ணில் பொறாமையின்மை
தந்தனர் அன்பில் தனிச்சிறை
மூன்று வேளை சத்தான உணவுடன்

தினம் ஒரு நபர் வருவார்
என்னிடம் படித்து அறிவை பெறுவார்
15 நாள் தாங்கவில்லை, மீண்டும் ஓர் பயணம்
இம்முறை அயலோர் கண்ணீல் கண்ணீர்
நானோ வரிசையில் , ஆம் இப்போது என் பெயர் பிணம் நான் சுடுகாட்டில்
இங்கு அனைவரும் தீண்டபடாதவர் தான்
காரணம் வெளிநாட்டு அழையா விருந்தாளி

பிணம் நான் புழம்புகிறேன்!!
என் கதை கேளீர்.

அவள் கண்பட்டதால் பன்பட்டது, மனம்
இனி பிறப்பவளும் அழகில்லை ஏற்றது
வருடங்கள் கடந்த காதல் ஒரே ஈர்ப்பு
எங்கள் பகைவன் சாதி எதிர்ததோ பெற்றோரை .

15 முதல் தேக்கிய ஆசை 5, 10 முடியும்முன் வயிற்றினில் எங்கள் உயிர்
இன்னும் ஆசை கோடி கோடி என விளையாடி வந்தவளை விட்டுவிட்டு
வரிசையில் புழம்புகிறேன் கேளீர்!

சொந்தம் கூட்ட போகிறது
கவலை கழிய போகிறது
பணம் பெருக்க போகிறது
கனவு பழிக்க போகிறது என்ற நேரத்தில்
வந்த வேசி, நாசி வழிபுகுந்து
நாசமாக்கியது ... கனவு கனவானது

பிறப்பது ஆணோ , பெண்ணோ
அவள் அழுது அது கலைந்திடுமோ
உறவினர்கள் உதவிக்கு வருவார்களோ
குடும்ப அட்டை அற்றவனுக்கு அரசு உதவுமோ
இல்லை ஊர் அழிக்கும் பாவி அவளையும் அழிக்குமோ

உயிர் இருந்தால் உணவு?
கல்லும் மண்ணும் காசாகும் உலகில்
அதையும் உண்ண முடியாது .. உடல் ஏற்காது
பொன்னும் பொருளும் கொடுத்தருள
தெய்வம் இங்கில்லை
அந்த பெண்ணைதான் காக்க தான்
யாரும் வருவீர்களோ

குடும்பத்தில் அக்கறை உள்ளோரே
கூர்ந்து கேளீர்
சுயஒழுக்கம் உயிர் காக்கும் அறிவீர்
-அருண்

எழுதியவர் : அருண் (25-Jun-21, 4:16 pm)
சேர்த்தது : arun
பார்வை : 43

மேலே