சூறாவளித் தென்றல்
சூறாவளித் தென்றல்
பெண்ணை
தென்றலென எண்ணி
சீண்டிப் பார்க்காதே...
அவள்
அனல் காற்றானால்
அலறிப் போவய்...
சூறாவளியானால்
சூறையாடப் படுவாய்...
புயலாய் மாறினால்
புண் பட்டுப்போவாய்...
பனிக் காற்றானாலும்
பதம் பார்க்கப் படுவாய்...
-உமா சுரேஷ்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
