மனித வடிவில் மந்திகள் - ஆசிரியப்பா

மனித வடிவில் மந்திகள்  - ஆசிரியப்பா

ஒழுகிசை அகவல் ஓசை உடைய
இணைக்குறள் ஆசிரியப்பா

மனிதரின் வடிவில் மந்திகள் இணைந்தே
நிமிர்ந்து நடந்து போகுது
வயிறு புடைக்க தின்றதால்
மிகுந்தியாய் கொழுப்பு உடலில் சேர்ந்ததே --- (1)

சேர்ந்த கொழுப்பையும் கரைக்கவே தினசரி
காலையில் நடையினை பழக்குது
நடக்கும் பயிற்சியை முடித்ததும்
அதிகமாய் கொழுத்த உணவை உண்ணுதே --- (2)

அளவிலா மனதின் பெரிய ஆசையால்
அழுத்தமும் அதிகமாய் ஆகுது
அதனையும் குறைக்கவே மருந்தினை
அளவிலும் அதிகமாய் தினமும் கொள்ளுதே --- (3)

இயலா நிலையினை அடைந்தபின் பெரியதாய்
இம்சையில் தினமுமே உழலுது
இளமையில் உழைக்கா நிலையினால்
இரும்பு உடலும் நோயினால் சிதைந்ததே --- (4)

உகந்த உரியக் கால நிலையிலே
உரியதைச் செய்தல் நன்மையே
உள்ள நேரம் போனபின்
எல்லை இல்லா பலவகை வலிவருமே --- (5)
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (2-Jul-21, 8:25 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 63

சிறந்த கவிதைகள்

மேலே