அயிரைக் கறி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

உயிரை வளர்க்கும் உடற்பிணியை நீக்கும்
மயிரைவளர்க் கும்மருசி மாற்றும் - வயிரச்
செயிரையுறாச் சற்குணநற் றெள்ளமிர்தே நாளும்
அயிரை எனுமீன் அது

- பதார்த்த குண சிந்தாமணி

அயிரைமீன் உடலையும், உயிரையும், உரோமத்தையும் வளர்க்கும்; உடல் பருமம், உணவில் வெறுப்பு இவை நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Jul-21, 10:08 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே