அத்தனையும் அரங்கேறும் அந்தி நாடகம் நீ

புத்தகம் பூமலர் போலும் அழகினில்
முத்துப் பேழையாய் செவ்விதழ் திறக்க
சித்திர விழியில் செங்கோடு ஓட
அத்தனையும் அரங்கேறும் அந்தி நாடகம்நீ

---சித்திர விழியில் செங்கோடு----அல்லது செவ்வரி
பெண்கள் கண்களின் சாமுத்திரிகா இலட்சணம் என்பார்கள்

----------------------------------------------------------------------------------------------------------------
யாப்பார்வலர்கள் ஈரசை மா விளமும் மூவசை காய்ச் சீரும்
விரவி வந்த கலிவிருத்தமாகக் காணவும்

எழுதியவர் : கவின் சாரலன் (16-Jul-21, 9:45 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 56

மேலே