பொன்தாரகையே
பொன்தாரகையே
உன்னை என்கைதீண்டவே_
வான்மழை உள்ளம் நனைக்குதே ...
பொன்தாரகையே
உன்னை இதழ்கொண்டு
வண்ணம்தீட்டவே_
அது புதுஎண்ணம் உண்டாக்குதே ...
பொன்தாரகையே
காத்துமழை அடிச்சாலும்
என்காதல்வீடு நிழல்தருமே_
என்றும் அழியாதே ...
எழுத்துப்பிழையாய்
என்காதல் இருந்தால் ,
திருத்தி எழுதிடுவேன்
தனியே தவித்திருந்தே...
நெனச்சா உன்ன சந்தோஷமா இருக்கே ,
சோகம் எதுவும் எனக்கில்லையே ...
அப்படியே உரிச்சு வெச்ச அழகுதேவதை நீயே ...
வியத்தகு என்வாழ்வின் தனித்தன்மை நீயே ...
பகலில் தொலைந்த நிலவே
இரவின் வெளிச்சம் நீயே ...
சிதறிய சிறுகூடு
அதுபறவை வாழ்ந்த
பழைய வீடாகும் ...
என்சிறுஇதயம்
அதுயென்தாரகை முன்பே
பதித்த தடமாகும் ...