இரகசியம்

இரகசியம்

தோட்டத்திலே செவ்வாழை,
தோடையாக மாறுமோ அவ்வாழை?

கோவிட்டாம் உலகெல்லாம்,
கோவிலிலும் கோவிட்டாம்
- எப்ப,
தொலையும் இதன் தொல்லை?.

தாய் இங்கே தனயன் அங்கே,
மனைவி இங்கே கணவன் அங்கே - இது,
இறைவன் இட்ட சாபம் இல்லை,
மனிதன் படைத்த விஞ்ஞானம்.*

செவ்வாழை தோடையானால்,
கோவிட்டும் மறைந்திடுமாம்
- இது
அன்னை எனக்கு சொன்ன இரகசியம்,
மறந்தே உங்களுக்கு சொல்லிவிட்டேன்.

* Whether it is true or not but widely believed that Covid 19 is a man creation.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (22-Jul-21, 12:53 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 88

மேலே