காதல் அம்பு
அவள் எனைப் பார்த்தாள் வில்லாய்
வளைந்து கொஞ்சம் மேலேறியது அவள்
புருவம் அவள் விழியால் எனைத் தீண்ட
அதிலிருந்து விடுபட்ட பார்வை எனது
இதயத்தைத் தைத்து மலராய் மாறியது
புரிந்துகொண்டேன் அது அவள் விடுத்த
காதல் அம்பு என்பது