இன்பமான மாலை துன்பம் நினையாது

நேரிசை வெண்பா

எத்தனை மாலை எனக்குமென் காதலர்கும்
வத்தாகொ டுத்ததின்பம் வள்ளலாய் --- அத்தனை
மாலைநினைத் தேனில்லை மாலையே நம்மைசாய்க்கும்
வேலை எடுத்துவரு மென்று

பலமாலையும் காதலருடன் களிப்பாய் கழித்த நான். இந்த மாலையில் நான் படப்போகும்
அவத்தையை ஒருமாலையும் நினைத்தேனில்லை. காதலர் பிரிவினால் வாடும் இன்று
நாம் ஒரு மாலையும் இதைப்பற்றி யோசிக்கா போனோம் என்று நினைக்கிறேன் .
என்ன செய்ய ?

காமத்துப் பால் குறள்

எழுதியவர் : பழனி ராஜன் (31-Jul-21, 8:38 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 77

மேலே